கோட்டாறில் நிழற்குடைகள் இல்லாத பஸ் நிறுத்தம்

கோட்டாறில் நிழற்குடைகள் இல்லாத பஸ் நிறுத்தம்

கோட்டாரில் பஸ் நிறுத்தம் பரபரப்பாக காணப்படும் நிலையில், பயணிகளுக்கு நிழற்குடை அமைக்கவேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.  

கோட்டாரில் பஸ் நிறுத்தம் பரபரப்பாக காணப்படும் நிலையில், பயணிகளுக்கு நிழற்குடை அமைக்கவேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

குமரி மாவட்டம் கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முன்பு பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் வழியாக கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், ஈத்தாமொழி, மணக்குடி, ராஜாக்கமங்கலம், திங்கள்சந்தை மார்கமாக செல்லும் பஸ்கள் பல செல்கிறது. இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல பல பயணிகள் இங்கு நின்று பஸ்களில் ஏறி செல்கின்றனர். இதனால் எப்போதும் இந்த பஸ் நிறுத்தம் பரபரப்பாக காணப்படும்.

கடந்த காலத்தில் அந்த பஸ் நிறுத்தத்தையொட்டி நிழற்குடை இருந்தது. ஆனால் தற்போது இல்லை. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து பயணிகள் தங்களை பாதுகாத்துகொள்ளும் வகையில் கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முன்புள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கவேண்டும். என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story