புதுக்கோட்டையில் வழக்கம்போல் பேருந்துகள் ஓடுகிறது!
வழக்கம்போல் ஓடும் பேருந்துகள்
புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து 70% பேருந்துகள் வழக்கம்போல் ஓடுகிறது
தமிழக முழுவதும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் ஆறு அம்ச கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில நாட்களாக போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை நேற்று தோல்வி அடைந்ததை எடுத்து இன்று அதிகாலை 12 மணி முதல் தமிழக முழுவதும் மேல் நிலத்தில் ஈடுபடுவது என அண்ணா தொழிற்சங்கம் முடிவெடுத்தது. இந்நிலையில் புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து 70% பேருந்துகள் வழக்கம்போல் ஓடுகிறது. இது குறித்து ஓட்டுநர் ஒருவர் தெரிவிக்கையில் எங்களுக்கு தமிழக அரசு விரைவில் நன்மை செய்யும் என தெரிவித்ததை அடுத்து இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏழு டெப்போக்கள் உள்ளன அதில் 400 பேருந்துகள் உள்ளன இவற்றில் 70% பேருந்துகள் மாவட்டம் முழுவதும் வியக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
Next Story