மாடுகளுக்கு கயிறு, மணி, சலங்கை விற்பனை மும்முரம்!

நாமக்கல்லில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு கயிறு, மணி, சலங்கை போன்ற அலங்காரப் பொருட்களின் விற்பனை தீவிரமாக நடக்கிறது.

நேற்று பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்தநிலையில், தை மாதத்தின் இரண்டாம் நாளில், இன்று கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, பொங்கல் படையலிட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. அத்துடன், கோயில்களில் உள்ள கோ சாலைகளிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது..

இதனால், மாடுகளை அலங்கரிக்க விவசாயிகள் பலரும் ஆர்வத்துடன் மாடுகளுக்கு கட்டும் தலை கயிறு, கை கயிறு, மூக்கணாங்கயிறு, நெற்றி கயிறு, சங்கு கயிறு, சலங்கை கயிறு, கருப்புக் கயிறு, சலங்கைகள், ஜாட்டி கோல், சங்கு பூ மற்றும் கொம்பில் அடிக்க பெயிண்ட், கழுத்தில் கட்ட கயிறு போன்ற பொருட்கள் நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன,இவற்றை நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.காலம் மாறினாலும், கிராமப்புற வாழ்வில் பல மாற்றங்கள் வந்தாலும், தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் மாட்டுப்பொங்கல் இன்றளவும் பழமை மாறாமல் கொண்டாட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story