அச்சரப்பாக்கம் பேருந்து நிலையத்தில் நீர் மோர் வழங்குதல்

அச்சரப்பாக்கம் பேருந்து நிலையத்தில் நீர் மோர் வழங்குதல்
அச்சரப்பாக்கம் பேருந்து நிலையத்தில் நீர் மோர் வழங்குதல்
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் அச்சிறுப்பாக்கம் பேரூர் கழக செயலாளர் A.E.முருகதாஸ் ஏற்பாட்டில் நீர்மோர் பந்தல் திறப்புவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருகழுக்குன்றம் S.ஆறுமுகம், அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் டாக்டர். ரங்கராஜன் , காஞ்சிபுரம் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், மோர், தர்பூசணிபழம், வெள்ளரிக்காய் போன்றவற்றை வழங்கி நீர்மோர் பந்தலை திறந்து வைத்தனர். இந்நிகழ்வின் போது, நகர மன்ற உறுப்பினர்கள், பேரூர் கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்

Tags

Read MoreRead Less
Next Story