ஆலங்குளத்தில் நாய்கள் கடித்து கன்றுக்குட்டி உயிரிழப்பு

ஆலங்குளத்தில் நாய்கள் கடித்து கன்றுக்குட்டி உயிரிழப்பு

கன்றுக்குட்டி உயிரிழப்பு

நாய்கள் கடித்து கன்றுக்குட்டி உயிரிழப்பு விவசாயி கவலை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம், திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் வெட்டும்பெருமாள். விவசாயியான இவா், தனது இடத்தில் 12 ஆடு, மாடுகள் வளா்த்து வருகிறாா். இவரது வீட்டருகேயுள்ள ஆறுமுகம் மகன் மணிகண்டன் என்பவா் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் வளா்த்து வருகிறாராம். அவை கூட்டமாக தெருவில் திரிந்து, அப்பகுதியினரை விரட்டிக் கடித்து அச்சுறுத்துவதாகக் கூறப்படுகிறது. வெட்டும்பெருமாளுக்குச் சொந்தமான 5 மாதக் கன்றுக்குட்டியை மணிகண்டன் வளா்த்து வரும் நாய்கள் கடித்தனவாம். இதில், கன்றுக்குட்டி உயிரிழந்தது. புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Tags

Next Story