“பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் 2025“ விருது பெற அழைப்பு

“பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் 2025“ விருது பெற அழைப்பு

புரஸ்கார் விருது 

"பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் 2025“ விருதுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம், “பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் 2025“ அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது 5 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, வீர, தீர மற்றும் தன்னலமற்ற செயல்கள் மற்றும் விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்,

சுற்றுச்சூழல், கலை மற்றும் பண்பாடு, புதுமைகள் செய்தல் ஆகிய துறைகளில் சமூகத்தில் சிறந்த வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்திய குழந்தைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர்- 26 ”வீர்பால்திவாஸ்” என்ற நாளினை சிறப்பிக்கும் விதமாக பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் குடியரசு தலைவர் அவர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது மற்றும் வழிகாட்டுதல் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் வலைதளத்தில் https://wcd.nic.in/ அறிந்து கொள்ளலாம்.

Tags

Next Story