கல்வி உதவி தொகை பெற அழைப்பு

கல்வி உதவி தொகை பெற அழைப்பு

நாகப்பட்டினத்தில் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் கல்வி உதவி தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் கல்வி உதவி தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பிவ) மிகப்பிற்படுத்தப்பட்ட (மிபிவ) மற்றும் சீர்மரபினர் (சீம) மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற 29.02.2024க்குள் புதிய விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜானி டாம் வர்கீஸ், தகவல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டபடிப்பு பயிலும் பிவ/ மிபிவ/சீம மாணவ/ மாணவியருக்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். நடப்பாண்டில் புதிய மாணவ, மாணவியர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் Student Login -இல் சென்று ஆதார் எண் அளித்து e- KYC Verfication செய்ய வேண்டும். 01.02.2024 முதல் செயல்பட துவங்கும். புதிய விண்ணப்பங்களை மாணாக்கர்கள் 29.02.2024-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்படவேண்டும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகவும் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்

Tags

Next Story