கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

பட்டயப் பயிற்சி

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சி.தமிழ்நங்கை தெரிவித்திருப்பது, இந்நிலையத்தில் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான முன்பதிவு மேலாண்மை நிலையத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி செப்டம்பரில் தொடங்கி ஓராண்டு காலம் நடைபெறும். இரு பருவ முறைகளில் பயிற்சி நடைபெறும். இப்பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழ் வழியில் மட்டுமே நடத்தப்படும். விண்ணப்பிப்பதற்கான தேதி, பயிற்சிக் கட்டண விவரங்கள், நிபந்தனைகள் விரைவில் வெளியிடப்படும். இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர் பிளஸ் 2 தேர்ச்சியும், 17 வயது நிறைவடைந்தவராகவும் இருக்க வேண்டும். பயிற்சியில் சேருவது குறித்த நிபந்தனைகள் www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் விரைவில் வெளியிடப்படும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04362 - 238253 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story