கன்றுக்குட்டியை கடித்து குதறிய சிறுத்தை - அச்சத்தில் பொதுமக்கள்:

கன்றுக்குட்டியை கடித்து குதறிய சிறுத்தை - அச்சத்தில் பொதுமக்கள்:

கன்றுக்குட்டியை கடித்து குதறிய சிறுத்தை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கன்றுக்குட்டி மற்றும் கோழிகளை சிறுத்தை கடித்து குதறி உள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கல்லபாடி முதலியார் ஏறியை சேர்ந்த கஜேந்திரன் த/ பெ வெங்கடசாமி என்பவருக்கு சொந்தமான கன்றுக்குட்டி மற்றும் கோழிகளை விடியற்காலை சிறுத்தை கடித்து குதறி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளார்கள். இதுகுறித்து குடியாத்தம் வனத்துறை ரேஞ்சர் வினோபா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த காலங்களில் குடியாத்தம் பகுதியில் அவ்வப்போது யானைகள் நடமாட்டம் இருந்து வந்த நிலையில், தற்பொழுது சிறுத்தை பகுதியில் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த அச்சத்தை போக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story