கலசபாக்கத்தில் கன்றுகள் விடும் விழா

கலசபாக்கத்தில் கன்றுகள் விடும் விழா

கொடி அசைத்து தொடங்கி வைத்த எம்எல்ஏ

கலசபாக்கத்தில் கன்றுகள் விடும் விழாவை எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி ஊராட்சி திடீர்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற கன்றுகள் விடும் விழாவை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொ ஷூண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழாவில் கலசபாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், புதுப்பாளையம் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் ஏழுமலை, கீழ்பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story