காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறைத்தீர் முகாம்

தர்மபுரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர் முகாம் எஸ்பி தலைமையில் நடைபெற்றது

தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு இந்த முகாம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் நேற்று முதல் முகாம் நடைபெற்றது.

இந்த முகாம் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நேற்று 01 - 05 - 2024 நடைபெற்றது. பொது மக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 42 மனுக்கள் பெறப்பட்டு 42 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம், மற்றும் காவல் ஆய்வாளர்கள் உதவி காவல் ஆய்வாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story