திமுக அரசின் சாதனைகள் எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடு தினசரி மார்க்கெட் பகுதியில் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு வாக்கு சேகரித்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்து திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு புதிய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்து உள்ள தினசரி மார்க்கெட் பகுதியில் கடை வைத்து இருக்கும் அனைவரிடமும் இனிப்புகள் வழங்கியும் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும் வாக்குகள் சேகரித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் தளபதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு எண்ணற்ற சேவைகள் வழங்கி வருகிறது, இந்த சேவைகள் தொடர வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திரு. மாதேஸ்வரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார், இந்த நிகழ்ச்சியில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Tags

Next Story