திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்

திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் செய்தார்.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து திமுக தலைமை கழக பேச்சாளர் லியோனி திண்டுக்கல் தொகுதி மேட்டுப்பட்டியிலும் ஆத்தூர் தொகுதி சின்னாளபட்டியிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: மக்களை சந்திக்காதவர்கள் எல்லாம் தற்போது மக்களை சந்திப்பதற்கு தேர்தல் வந்ததால் ஓடோடி வருகிறார்கள். ஆனால் திமுக எப்போதும் மக்களை சந்திக்கின்ற கட்சி. மக்களுக்கு எந்த தீங்கு வந்தாலும் எதிர்த்து நிற்கின்ற ஒரே கட்சி திமுக தான். மக்கள் நலனில் அக்கறை கொண்டு இந்தியாவுக்கே வழிகாட்டியாக முதல்வர் ஸ்டாலின் விளங்குகிறார். மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற, சர்வாதிகாரம் படைத்த மோடியை வீட்டுக்கு அனுப்ப மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story