காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம்....

காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம்....

 பொதுக்கூட்டம்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஜி செல்வம் அவர்களை ஆதரித்து மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம்,சித்தாமூர்- சரவம்பாக்கம் கூட்டு சாலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஜி.செல்வம் அவர்களை ஆதரித்து மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஏழுமலை, சிற்றரசு, பொன் சிவகுமார் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், பனையூர் மு.பாபு ஆகியோர் கலந்து கொண்டு கழக அரசின் சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறினர்.

கழக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி அவர்கள் பேசுகையில் பெண்கள் தான் உண்மையிலேயே நன்றியுள்ளவர்கள் என்பதை கலைஞர் இடத்திலேயே கற்றுக் கொண்டவர் நம் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆகையால் தான் பெண்களுக்காக இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்டவைகளை மகளிர்களுக்காக செயல்பட்டு வருகிறார் எனவும், எம் ஜி ஆர் வருகிற போது எப்படி பெண்கள் கூட்டம் வருகிறதோ அதுபோல எங்கு பார்த்தாலும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பெண்கள் கூட்டம் அதிக அளவில் வருகிறது அதுதான் பெண்களின் நன்றி உணர்வு எனவும், மோடி அவர்களே ரயில் மூலமாகவோ விமானம் மூலமாகவோ எத்தனை கோடி பணம் கொண்டு வந்தாலும் என்னை போன்றவர்கள் உயிரோடு உள்ளவரை உங்களை விடமாட்டோம் என மோடிக்கு எச்சரிக்கை விடுத்தார்.

முன்னதாக செய்யூரில் ஒன்றிய கழக செயலாளர் எம் எஸ் பாபு அவர்களின் ஏற்பாட்டில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த அலுவலகத்தை கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து இனிப்புகளை வழங்கினார்.

Tags

Next Story