மின்மாற்றியை மறைக்கும் மரக்கிளை அகற்றப்படுமா?

மின்மாற்றியை மறைக்கும் மரக்கிளை அகற்றப்படுமா?

மரங்கள் சூழ்ந்த மின்மாற்றி 

உத்திரமேரூர் அருகே காட்டுப்பாக்கம் சாலையில் மின் மாற்றியை சுற்றி மரங்கள் படர்ந்திருப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், வேடபாளையத்தில் இருந்து, காட்டுப்பாக்கம் செல்லும் சாலையோரம், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு சீரான மின்சாரம் வழங்கும்வகையில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால், மின்மாற்றியை சுற்றிலும் மரக்கிளைகள் புதர்போல மண்டியுள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்தால், மரக்கிளைகள் மின்ஒயரில் உரசி மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, மின்மாற்றியை சுற்றிலும் புதர்போல படர்ந்துள்ள மரக்கிளையை அகற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story