கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு

கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு

ஆலம்பூண்டியில் உள்ள ஸ்ரீரங்கபூபதி கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ஆலம்பூண்டியில் உள்ள ஸ்ரீரங்கபூபதி கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள ஸ்ரீரங்க பூபதி பார்மசி கல்லூரியில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இதற்கு கல்லூரியின் தாளாளர் வக்கீல் ரங்க பூபதி தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கல் லூரி செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். இதில் சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் யோகா பிரியா, டாக்டர்கள் ஹரிஷ் முத்துக்குமரன், தீபிகா ஆகியோர் கலந்து கொண்டு புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். தொடர்ந்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட் டது. இதில் துணை முதல்வர் ராஜா, பேராசிரியர்கள் மோகன்ராஜ், இம்ரான்கான், ஜீடி மற்றும் பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவ, மாணவி களின் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Tags

Next Story