உலக அமைதி வேண்டி குத்துவிளக்கு பூஜை

உலக அமைதி வேண்டி குத்துவிளக்கு பூஜை

குத்துவிளக்கு பூஜை

பாண்டுவனேஸ்வரர் கோவிலில் உலக அமைதி வேண்டி குத்துவிளக்கு பூஜை நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் உலக அமைதி வேண்டி குத்துவிளக்கு பூஜை நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை பாண்டுவனேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து உலக அமைதி வேண்டி நடந்த குத்துவிளக்கு பூஜையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பூஜை செய்தனர். பிரதோஷ வழிபாட்டு மன்ற தலைவர் செந்தில்குமார், ரவி குருக்கள் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story