தேவாங்கு உயிருடன் பிடிப்பு

தேவாங்கு உயிருடன் பிடிப்பு

தேவாங்கு உயிருடன் பிடிப்பு

நத்தம் நீதிமன்ற வளாகத்தில் தேவாங்கு உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
நத்தம் நீதிமன்ற வளாகத்தில் தேவாங்கு உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தேவாங்கு ஒன்று புதன்கிழமை சுற்றி தெரிந்துள்ளது. இதையறிந்த நீதிமன்ற பணியாளர்கள் நத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் லெட்சுமணன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் அங்கிருந்த தேவாங்கை பத்திரமாக உயிருடன் பிடித்து நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story