கார் மோதி விபத்து; மூதாட்டி படுகாயம்

கார் மோதி விபத்து; மூதாட்டி படுகாயம்

முனையனூர் அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது வேகமாக வந்த கார் மோதி விபத்து உண்டானது. 

முனையனூர் அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது வேகமாக வந்த கார் மோதி விபத்து உண்டானது.

முனையனூர் அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது வேகமாக வந்த கார் மோதி விபத்து. மூதாட்டி படுகாயம். கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, காணியாளம்பட்டி அருகே வீரியபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் குப்பம்மாள் வயது 65 . இவர், டிசம்பர் எட்டாம் தேதி காலை 11- மணியளவில், முனையனூரில் இருந்து சேங்கல் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அதே சாலையில் வேகமாக காரை ஓட்டி வந்த ஞானசேகரன் என்பவர், நடந்து சென்ற குப்பம்மாள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், நிலை தடுமாறி கீழே விழுந்த குப்பம்மாளுக்கு வலது கால், இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, குப்பம்மாள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஞானசேகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.

Tags

Next Story