தூத்துக்குடியில் கார் புரோக்கர் மர்ம மரணம் - போலீஸ் விசாரணை

தூத்துக்குடியில் கார் புரோக்கர் மர்ம மரணம் - போலீஸ் விசாரணை

பைல் படம் 

தூத்துக்குடியில் கார் புரோக்கர் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (55). கார் புரோக்கர் வேலை செய்து வந்தார். இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று உட்புறமாக பூட்டியிருந்த அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக அப்பகுதி மக்கள் வட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் பாலகிருஷ்ணன் இறந்து கிடந்தார். அவரது சடலத்தை பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்ததால் இறந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story