ராசிபுரம் அருகே கண்டெய்னர் மீது கார் மோதல்

ராசிபுரம் அடுத்த பாச்சல் பிரிவு அருகே கண்டெய்னர் மீது கார் மோதி கவிழ்ந்து விபத்து அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்.

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை, 50; உரக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது காரில் மனைவி, மகன், மகள், உறவினர் உள்ளிட்ட ஐந்து பேருடன் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ராசிபுரம் அடுத்த சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை, பாச்சல் பிரிவு அருகே சென்றுகொண்டிருந்த போது, காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை செல்லதுரை ஓவர்டேக் செய்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கண்டைனர் மீது கார் மோதியதில் கார் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக 5 பேரும் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். குப்புற கார் கவிழ்ந்து கிடைப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நிமிர்த்தினர். இச்சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story