ஷேர் ஆட்டோ மீது கார் மோதி விபத்து - ஒருவர் பலி, 6 பேர் காயம்

ஷேர் ஆட்டோ மீது கார் மோதி விபத்து - ஒருவர் பலி, 6 பேர் காயம்

திருபுவனம் அரசு மருத்துவமனை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூரைச் சேர்ந்தவர் ராமநாதன் (50). ஷேர் ஆட்டோ ஓட்டுனரான இவர் பயணிகளை ஏற்றி கொண்டு மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் செல்லும் போது பின்னால் வந்த கார் மோதியதில் ஷேர் ஆட்டோ இரண்டு முறை ரோட்டில் உருண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் ராமநாதன், பஜானா பேகம், சிக்கந்தர் மதினா, பதரியாபானு, மும்தாஜ் மற்றும் இருவர் காயமடைந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்தவர்கள் திருபுவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆட்டோ ஓட்டுனர் ராமநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திருப்புவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story