கொண்டலாம்பட்டி அருகே லாரி மீது கார் மோதல்: ஒருவர் பலி

கொண்டலாம்பட்டி அருகே லாரி மீது கார் மோதல்: ஒருவர் பலி

கோப்பு படம் 

கொண்டலாம்பட்டி அருகே லாரி மீது கார் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியானர்.

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 42), தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருடைய நண்பர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த கார்த்திகேயனும் (39) மகுடஞ்சாவடியில் இருந்து பென்னாகரத்துக்கு காரில் சென்று விட்டு மகுடஞ்சாவடிக்கு வந்து கொண்டிருந்தனர்.

அரியானூர் மேம்பாலத்தில் சென்ற போது முன்னால் சென்ற லாரியின் பின்பக்கம் கார் மோதியது. இதில் காரில் இருந்தவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்

Tags

Next Story