டூவீலர் மீது கார் மோதி விபத்து- ஒருவர் படுகாயம்

காட்டூர் பிரிவு அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு
காட்டூர் பிரிவு அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, நன்னியூர் அருகே உள்ள செவ்வந்தி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தர்ஷன் வயது 20. இவர் பிப்ரவரி ஒன்றாம் தேதி காலை 10 மணி அளவில், மாயனூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் காட்டூர் பிரிவு சாலை அருகே வந்தபோது, கரூர்,வெங்கமேடு வடக்கு ராம்நகர் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் ஓட்டி வந்த கார், தர்ஷன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தர்ஷனுக்கு தலை, முன்நெற்றி உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தர்ஷன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்தில் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும் அஜாக்கிரதை ஆகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கோபிநாத் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.

Tags

Next Story