நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த கார்!

நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த கார்!

தீ விபத்து

திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன் பாளையம் நெடுஞ்சாலையில் திடீரென கார் தீப்பற்றி எரிந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன் பாளையம் நெடுஞ்சாலையில் வெற்றிவேல் என்பவர் காரில் சென்று கொண்டிருந்த போது காரின் முன்பகுதியில் திடீரென புகை கிளம்பியுள்ளது.

இதனையடுத்து வெற்றிவேல் காரில் இருந்து இறங்கி பார்த்தபோது காரின் முன் பக்கம் முழுவதுமாக தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Tags

Next Story