குளித்தலை அருகே காரும்- லாரியும் மோதல்: டிரைவர் உயிரிழப்பு

குளித்தலை அருகே காரும்- லாரியும் மோதல்: டிரைவர் உயிரிழப்பு

காவல் நிலையம்

குளித்தலை அருகே காரும்- லாரியும் மோதிக் கொண்டதில் டிரைவர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கோடங்கிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் விமல் என்கிற குமரேசன் வயது 38. ஆம்னி கார் டிரைவர். ஆக பணியாற்றி வந்தார்.

மார்ச் 11ஆம் தேதி அன்று, இவரது காரில் கரூர் மாவட்டம், குளித்தலை, பொய்யாமணியை சேர்ந்த அஜித்குமார் வயது 28, குளித்தலையைச் சேர்ந்த பாக்கியராஜ் வயது 37, கிருஷ்ணராயபுரம் தாலுக்கா பாப்பக்கா பட்டி பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் வயது 27, கடவூர், கருங்காலிப்பட்டியை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் வயது 40,

கரூர் வாங்க பாளையம் முத்து நகரை சேர்ந்த பெரியசாமி வயது 40 ஆகியோருடன் கரூர் - கோவை சாலையில் சென்று கொண்டு இருந்தார். இவரது கார் அதிகாலை 3 மணி அளவில் தென்னிலை பகுதியில் செயல்படும் திருமுருகன் பெட்ரோல் பங்க் அருகே வேகமாக சென்றபோது, அதே சாலையில் வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காரை ஓட்டி சென்ற விமல் என்கிற குமரேசன் சம்பவ இடத்தில் உயிர் இழந்தார். காரில் வந்த அனைவருக்கும் லேசான மற்றும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அனைவரையும் ஏற்று கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

உயிரிழந்த குமரேசனை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனை சவக்கிடங்கு அனுப்பி வைத்து இது பெரியசாமி அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல்துறையினர்.

Tags

Next Story