மதுராந்தகம்: அடுத்தடுத்து மோதிகொண்ட வாகனங்கள் - உயிர் தப்பிய பயணிகள்

மதுராந்தகம்: அடுத்தடுத்து மோதிகொண்ட வாகனங்கள் - உயிர் தப்பிய பயணிகள்
அப்பளம் போல் நொறுங்கிய கார் 
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த கள்ளபிராண்புரம் பகுதியில், இரண்டு அரசு பேருந்துகள் ஒரு கார், ஒரு லாரி என அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.. சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக சுமார் அரை மணி நேரமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்து பின்புறம் மோதிய கார் ஒன்று அப்பளம் போல் நொருங்கியது ஆனால் காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இந்த தொடர் ஒன்றின் பின் ஒன்றாக மோதிக்கொண்ட வாகன விபத்தில் 5 பேர் லேசான காயத்துடன் உயிர் சேதமின்றி தப்பித்தனர்.காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து ஏற்பட்ட இடத்தில் போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story