கார் லாரி பின்புறம் மோதி விபத்து: உயிர் தப்பிய இளைஞர்கள்

கோவை அருகே கார் லாரி பின்புறம் மோதி தீ விபத்து ஏற்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற சொகுசு கார் ஒத்தக்கால் மண்டபம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது கட்டுபாட்டை இழந்து முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி மீது பலமாக மோதியது.

மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிய துவங்கியதை அடுத்து காரில் பயணித்த நான்கு இளைஞர்கள் கீழே இறங்கி கிணத்துக்கடவு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள செட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது காரில் பயணித்த இளைஞர்கள் கோவையில் உள்ள டைட்டில் பார்க்கில் வேலை செய்து வருவதும் வால்பாறைக்கு சுற்றுலா செல்லுகையில் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

பாலத்தின் மேல் சென்ற சொகுசுக்கர் விபத்தில் தீ பிடித்த எரிந்தது சிறிது நேரம் கோவை பொள்ளாச்சி மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story