நள்ளிரவில் கஞ்சா போதையில் கார் கண்ணாடி உடைப்பு

தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள சுந்தர் ராமபுரம் மற்றும் கதிரேசன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் நள்ளிரவில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7க்கும் மேற்பட்ட கார் மற்றும் குட்டி யானை ஆகியவற்றின் கண்ணாடியை கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் உடைத்து நொறுக்கியுள்ளார். இதை அடுத்து காலையில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த காரின் உரிமையாளர்கள் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில் கஞ்சா போதையில் ஒரு வாலிபர் தொடர்ச்சியாக அந்தப் பகுதியில் உள்ள கார்களின் கண்ணாடி மீது கல்லை போட்டு உடைத்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த வாலிபரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் கஞ்சா போதையில் வாலிபர் கார் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story