நாகப்பட்டினத்தில் தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி

நாகப்பட்டினத்தில் தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி

வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்

நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், கலந்துகொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், கலந்துகொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டத்தில் அவ்வப்போது மாநில மற்றும் ஒன்றிய அரசு அறிவிக்கும் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) Gr.IV-ல் 6244 காலிப்பணியிடங்களை கொண்டுள்ள இளநிலை உதவியாளர்,

தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காவலர் வனக்காப்பாளர், வரித்தன்டலர் போன்ற பல்வேறு பணியிடங்களை கொண்ட தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எம்.ஸ்ரீநிவாசன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பா.முத்துகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story