தொழில் வழிகாட்டல் கருத்தரங்கம் !

தொழில் வழிகாட்டல் கருத்தரங்கம் !

 கருத்தரங்கம்

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., நினைவு பொறியியல் கல்லுாரியில் மின்னணு மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் 'தொழில் வழிகாட்டல்' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., நினைவு பொறியியல் கல்லுாரியில் மின்னணு மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் 'தொழில் வழிகாட்டல்' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு கல்லுாரி தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி துணை முதல்வர் மணிக்கண்ணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கள சேவை பொறியாளர் ஜெயச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கருத்துரை வழங்கினார். கல்லுாரி முதல்வர் தணிகைவேலன் சிறப்புரையாற்றினார். இதில் தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி எடுத்துரைத்தார். இதில் கல்லுாரி மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story