லாலாபேட்டை அருகே தனியார் பேருந்து மீது சரக்கு வேன் மோதல்: டிரைவர் பலி

லாலாபேட்டை அருகே தனியார் பேருந்து மீது சரக்கு வேன் மோதல்: டிரைவர் பலி

விபத்தில் சிக்கிய பேருந்து

லாலாபேட்டை அருகே தனியார் பேருந்து மீது சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வேன் டிரைவர் சம்பவ இடத்தில் பலியானர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பத்தூரில், நேற்று இரவு கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் பேருந்து மீது குளித்தலையில் இருந்து கரூருக்கு வாழைத்தார் ஏற்றி சென்ற ஈச்சர் சரக்கு வேன் நேருக்கு நேர் மோதியதில், கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், வாரணம் பகுதியைச் சேர்ந்த சரக்கு வேன் டிரைவர் நெஜிமல் (28) சம்பவ இடத்தில் பலியானார்.

பேருந்தை ஓட்டிய டிரைவர், நடத்துநர், பேருந்தில் பயணம் 29 பயணிகள் பலத்த காயம் ஏற்பட்டு குளித்தலை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றனர். அவசர சிகிச்சை பிரிவில் போதிய இடவசதி இல்லாமல் காயமடைந்த சிலர் தரையில் படுத்திருந்த அவல நிலையும் ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சிலர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த லாலாபேட்டை காவல்துறையினர் சரக்கு வாகன டிரைவர் சடலத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து லாலாபேட்டை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story