கார்கள் நேருக்கு நேர் மோதல்: தம்பதி படுகாயம்

கார்கள் நேருக்கு நேர் மோதல்: தம்பதி படுகாயம்

காவல் நிலையம்

கரூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கணவன் மனைவி படுகாயம் அடைந்தனர்.

கரூர் மாவட்டம், தென்னிலை முருளைகாட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 55. இவர் தற்போது திருப்பூர் மாவட்டம், பல்லடம் கலிவேயம்பட்டி பகுதியில் வசித்து வருகிறார்.

இவரது மனைவி ராணி வயது 50. இவர்கள் இருவரும் இவர்களுக்கு சொந்தமான ஆல்டோ காரில், மே 2-ம் தேதி மாலை 4:45-மணி அளவில், கரூர் - கோவை சாலையில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் கரூர் மாவட்டம், தென்னிலை காவல் எல்லைக்குட்பட்ட, வைரமடை,செட்டிநாடு மெஸ் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்திசையில்,

கரூர், திருமாநிலையூர், முதல் கிழக்கு தெருவை சேர்ந்த மனோஜ் குமார் வயது 31 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு கார், பழனிச்சாமி ஓட்டிச் சென்ற கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பழனிச்சாமிக்கு வலது, இடது கால்கள் பலத்த காயம் அடைந்தது. அதேபோல இவரது மனைவி ராணிக்கு இடதுபுற இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இருவரையும் மீட்டு,தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பழனிச்சாமி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய மனோஜ் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல்துறையினர்.

Tags

Next Story