அனுமதியின்றி கட்சி சின்னம் வரைந்த 3 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி  கட்சி சின்னம் வரைந்த 3 பேர் மீது வழக்கு

காவல்துறை விசாரணை


பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிகளில் அனுமதியின்றி கட்சி சின்னங்களை வரைந்த நபர்கள் மீது வழக்கு பதிவு.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரப்பட்டி சட்டமன்ற தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் அம்சவள்ளி தேர்தல் பணி காரணமாக பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் நேற்று ஈடுபட்டார். அப்போது மோளையானூர் அம்பேத்கர் காலனி பகுதியில் பிரசாத் வெங்கடாசமுத்திரம் பகுதியில் ஜெயராமன் கொப்பக்கரை பகுதியை சேர்ந்த மாரிமுத்து ஆகியோர் தங்களுடைய கட்சி சின்னங்களை அவர்களது வீட்டின் சுவர்களில் வரைந்திருந்தனர். இவர்கள் 3 பேரும் உதவி தேர்தல் அலுவலர் அனுமதியின்றி தேர்தல் விதிமுறை மீறி தங்களது வீட்டின் சுவர்களில் அவர்களது கட்சி சின்னங்களை வரைந்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து அனுமதி இன்றி கட்சி சின்னங்கள் வரையப் பட்டதாக பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் பொம்மிடி காவல் துறையினர் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags

Next Story