மானாமதுரையில் மூதாட்டியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

மானாமதுரையில் மூதாட்டியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

காவல் நிலையம் 

மானாமதுரையில் மூதாட்டியை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியை சேர்ந்தவர் தெய்வா(60). இவர் தனது வீட்டின் அருகே காம்பவுண்ட் சுவர் எழுப்ப முற்பட்டபோது பக்கத்து வீட்டுக்காரர்கள் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக மானாமதுரை காவல் நிலையத்தில் தெய்வா புகார் அளித்தார்.

அப்புகாரின் அடிப்படையில் கணேசன்(28), ஆறுமுகம்(64), சரிதா(52), வளர்மதி (50) ஆகியோர் மீது மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story