தொழிலாளியை தாக்கிய 4பேர் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கிய 4பேர் மீது வழக்கு

கோப்பு படம் 

தொழிலாளியை தாக்கிய 4பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம், தாசம்பட்டி அருகே பவளந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கௌரிசங்கர் (28),தொழிலாளி. இவரது மனைவியை,அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (33) என்பவர் கேலி கிண்டல் செய்துள்ளார்.

இந்நிலையில் கௌரி சங்கர், சக்திவேலிடம்.மனைவியை கேலி கிண்டல் செய்தது குறித்து கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் சக்திவேல், அவரது குடும்பத்தினர் கௌரி சங்கரை தாக்கினர். தாக்குதலில் படுகாயம் அடைந்த கௌரி சங்கரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பென்னாகரம் போலீசில் அவர் அளித்த புகாரின் பேரில்,சக்திவேல் (33), அவரது மனைவி சுஜி (22), தாயார் சத்துணவு அமைப்பாளர் பழனியம்மாள் (45), பெருமாள் (48) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பென்னாகரம் போலீசார் சக்திவேலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story