முன்விரோத தகராறு 4 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 4 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 4 பேர் மீது வழக்கு

முன்விரோதம் காரணமாக தகராறு. புகாரின்பேரில் 4 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தியாகதுருகம், கஸ்துாரிபாய் நகரைச் சேர்ந்தவர் பரசுராமன், 39; அதே பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி, 32; இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 6ம் தேதி இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறை தடுக்க முயன்ற பரசுராமன் தந்தை குழந்தைவேலை, 61; முனுசாமி மற்றும் அவர்களின் உறவினர்கள் திருவாசகம், 55; திருநாவுக்கரசு, 24; மணிவாசகம், 30; ஆகியோர் தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின்பேரில், முனுசாமி உட்பட 4 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story