கோஷ்டி மோதல் - 5 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதல் - 5 பேர் மீது வழக்கு
பைல் படம்
கன்னியாகுமரி மாவட்டம், கழுவன்தட்டு விளை இருதரப்பினரும் இடையே ஏற்பட்ட மோதலில் ஐந்து பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி, கழுவன்தட்டு விளை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் இவரது மனைவி சரோஜா (60). இவரது மருமகள் அஞ்சு என்பவருக்கும் அஞ்சுவின் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அஞ்சு தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் செருப்பன்கோடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (29) என்பவர் உடன் அஞ்சுவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சரோஜா தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ராஜேஷ் மற்றும் மன்மதன் (30) ஆகியோர் பைக்கில் சரோஜா வீட்டிற்கு வந்து கேட்டை அடித்துள்ளனர். அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்த சரோஜாவின் மகனை தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதை சரோஜா தட்டி கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் மற்றும் மன்மதன் ஆகியோர் சரோஜாவை தாக்கி கீழே தள்ளி உள்ளனர். இதை அடுத்து இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். சம்பவம் குறித்து இருதரப்பும் தனித்தனியாக மணவாள குறிச்சி போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பியின் சேர்ந்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story