திமுக அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திமுக அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திமுக அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு 18ம் தேதிக்கு ஒத்திவைத்து, முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

திமுக அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு 18ம் தேதிக்கு ஒத்திவைத்து, முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலமாக, அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.இது தொடா்பாக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 8 போ் மீது விழுப்புரம் குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனா்.

இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவரான லோகநாதன் இறந்துவிட்டாா்.இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சோ்க்கப்பட்டிருந்த 67 பேரில் இதுவரை 33 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது.

இவா்களில் 26 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாக பி சாட்சியமளித்தனா்.இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாத் ஆகிய மூவா் மட்டுமே ஆஜராகினா். இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா உத்தரவிட்டாா்.

Tags

Next Story