முன்விரோத தகராறு : நான்கு பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு : நான்கு பேர் மீது வழக்கு

முன்விரோததால் தகராறு

கள்ளகுறிச்சி மாவட்டம், புக்கிரவாரி பகுதியில் முன்விரோதத்தால் தாக்குதல் நடத்திய நால்வர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் நாச்சன் மகன் கோமதுரை, 27; வரதப்பனுாரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சுரேந்திரன். இருவருக்குமிடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் உள்ளது. கடந்த 6ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இரு தரப்பு புகாரின் பேரில், சுரேந்திரன், ராமலிங்கம், விக்னேஷ், கோமதுரை ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story