நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது வழக்கு

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது வழக்கு

காவல்துறை விசாரணை


அனுமதியின்றி கட்சி கொடி கம்பம் வைத்தது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீசனை ஆதரித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று இரவு கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் பிரசாரம் மேற்கொண்டார். இதனையொட்டி, அக்கட்சியினர் போலீஸ் அனுமதியின்றி அம்பேத்கர் சிலை அருகே கட்சி கொடிக் கம்பம் வைத்தனர். அனுமதியின்றி கொடிக்கம்பம் வைத்தது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் மாரியப்பன், வேட்பாளர் ஜெகதீசன், எறையூர் ரோடு சுரேஷ் மணிவண்ணன் ஆகியோர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story