டூவீலரில் கருந்திரியை கொண்டு சென்றவர் மீது வழக்கு

டூவீலரில் கருந்திரியை கொண்டு சென்றவர் மீது வழக்கு

காவல் நிலையம் 

தாதம்பட்டியில் இருசக்கர வாகனத்தில் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் கருந்திரியை பாதுகாப்பு இன்றி கொண்டு சென்றவர் மீது சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் சீனிவாசன். இவர் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாதம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, திருத்தங்கள் பள்ளப்பட்டியைச் சார்ந்த பாலு என்பவர் இருசக்கர வாகனத்தில் அரசு அனுமதி இன்றி சுயலாபம் கருதி 15 கட்டுகள் கொண்ட 30 குரோஸ் திரியை இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. பட்டாசு தயாரிக்கப்படும் மூலப் பொருளான கருந்திரியை எந்தவித பாதுகாப்பும் இன்றி விபத்து ஏற்படும் என அறிந்தும் அஜாக்கிரதையாக செயல்பட்ட பாலு என்பவர் மீது சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story