தாயை தாக்கியதாக மகள்கள் மீது வழக்கு பதிவு

தாயை தாக்கியதாக மகள்கள் மீது வழக்கு பதிவு

தாயை தாக்கியதாக மகள்கள் மீது வழக்கு பதிவு

விருதுநகர் மாவட்டம், இனாம்ரெட்டியபட்டியில் தாயை தாக்கிய மகள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், இனாம்ரெட்டியபட்டி பகுதியைச் சார்ந்தவர் சேர்வை அம்மாள் வயது 85 இவர் உடல்நிலை சரியில்லாததால் இவருடைய கடைசி மகள் உடன் குடியிருந்து வருவதாக கூறப்படுகிறது இவர்கள் வீட்டுக்கு பின்னால் இவருடைய நான்காவது மகள் சுந்தரம்மாள் குடியிருந்து வருவதாகவும் ஐந்தாவது மஹால் மகாலட்சுமியை கரிசல்குளத்தில் திருமணம் முடித்துக் கொடுத்த போது கணவர் உயிரிழந்த இறந்துவிட்ட நிலையில் ஆறு வருடமாக வீட்டில் வசித்து வருவதாகவும் சென்னையில் உள்ள மகனுக்கு தங்கைகள் 40 ஆயிரம் கடன் கொடுத்ததாகவும் அதை திருப்பி அவர் தராத காரணத்தினால் வீட்டை அவர்கள் பெயருக்கு மாற்றி தர வேண்டும் என இருவரும் தாயை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் காயமடைந்த சேர்வை அம்மாள் மகனுக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனால் சென்னையில் இருந்து பழனிக்குமார் விருதுநகர் வந்த நிலையில் தாயை பார்த்துவிட்டு காயப்படைந்து அவருக்கு சிகிச்சை அளித்துவிட்டு உயிர் நடவடிக்கை எடுக்க கூறி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் சூலக்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story