சிறுமியிடம் பாலியல் சீண்டல்-ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் மீது வழக்கு

சிறுமியிடம் பாலியல் சீண்டல்-ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் மீது வழக்கு

பெரியசாமி 

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி 70.இவர் அகரம்சீகூர் கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த சனிக்கிழமை, மூன்றாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி பள்ளி விடுமுறை நாள் என்பதால் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பெரியசாமி அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். உடனே அந்த சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மங்களமேடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்து வந்த மங்களமேடு மகளிர் காவல் துறையினர் பெரியசாமியை விசாரணை செய்தபோது அவருக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதில் பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து மங்களமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story