திமுக மாசெ குறித்து அவதூறு பதிவு காங்கிரஸ் நிர்வாகி மகன் மீது வழக்கு

திமுக மாசெ குறித்து அவதூறு பதிவு காங்கிரஸ் நிர்வாகி மகன் மீது வழக்கு

வழக்கு பதிவு 

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே திமுக மாவட்ட செயலாளர் மீது அவதூறு பரப்பியவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீரனுார் அருகே உள்ள ஒடுக் கூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் காங்கிரஸ் நிர்வாகி. இவரது மகன் சோலை ராஜன்(35). இவர் தனது முகநுால் பக்கத்தில் புதுகை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன் குறித்து அவதுாறு செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதுபற்றி கீரனூர் கள்ளத்தெருவை சேர்ந்த பாண்டியன் என்பவர் போலீசில் புகார் மனு அளித்தார். அதன்பேரில், சமூக வலை தளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக சோலைராஜன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story