கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் தாக்குதல்

கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் தாக்குதல்

தாக்குதல் 

விருதுநகர் அருகே கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் அருகே வடமலக்குறிச்சி பகுதியைச் சார்ந்தவர் செல்வம் இவர் தனது மனைவி மகள் மற்றும் தாய் தந்தையுடன் அந்த பகுதியில் வசித்து வருவதாகவும், இவருடைய தாய் தந்தை அந்த பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் அழகர்சாமி என்பவர் செல்வத்தின் தாய் தந்தை வைத்துள்ள பெட்டிக்கடையில் சென்று பொருட்கள் வாங்கினால் பொதுமக்களிடம் பிரச்சனை செய்து வந்தாக கூறப்படுகிறது.

இதை அடுத்து செல்வம் வடமலைகுறிச்சி சாலையில் உள்ள பாரில் மது அருந்திவிட்டு வெளியே வந்த பொழுது அங்கு சென்ற அழகர்சாமி அவரை தர குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து கொலை மிரட்டல் விட்டு சென்றதாக கூறப்படும் நிலையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி செல்வமளித்த புகாரியின் அடிப்படையில் அழகர்சாமி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story