போதையில் பைக் ஓட்டிய 2 பேர் மீது வழக்கு

போதையில் பைக் ஓட்டிய 2 பேர் மீது வழக்கு
பைல் படம்
இரணியலில் மது போதையில் வாகனம் ஒட்டிய இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் மற்றும் போலீசார் திங்கள் நகர் பகுதியில் நேற்று வாகன சோதனையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ரெண்டு பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர்கள் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த ஜெபா (47),மேற்கு நெய்யூர் பகுதி சேர்ந்த சிவா (24) என்று தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் குளச்சல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மதுபோதையில் இருந்ததற்கான சான்று பெற்று, இரணியல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story