குழந்தை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு

குழந்தை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு

குழந்தை திருமணம் செய்தவர் கைது

திருவண்ணாமலை அருகே குழந்தை திருமணம் செய்த வாலிபர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அடுத்த காட்டு மலையனூர் பகுதியை சேர்ந்த அண்ணாமலை (வயது 22) என்பவருக்கும், உளுந்தூர்பேட்டை தாலுகாவை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து சமூக நல அலுவலர்களுக்கு தகவல் கிடைத்ததன் பேரில் அலுவலர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து சிறுமி மீட்கப்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு நல இல்லத்தில் சேர்க்கப்பட்டார். மேலும் குழந்தை திருமணம் செய்த அண்ணாமலை மற்றும் சிறுமியின் உறவினர்கள் 3 பேர் மீது திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story