இளம்பெண் மீது தாக்குதல்: காவல்துறையினர் வாக்குப்பதிவு

இளம்பெண் மீது தாக்குதல்: காவல்துறையினர் வாக்குப்பதிவு
சிவகாசி அருகே இளம்பெண்ணை தாக்கிய 6 பேர் மீது வழக்கு பதிவு...
சிவகாசி அருகே இளம்பெண்ணை தாக்கிய 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள பி.திருவேங்கடபுரத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் மகள் கௌசல்யா (28).இவரது வீட்டின் அருகே பஞ்சாயத்து குழாய் போடப்பட்டிருந்தது.குழாய் உடைந்ததால் பஞ்சாயத்து நிர்வாகம் அந்த குழாயை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

கௌசல்யா சொல்லி தான் பஞ்சாயத்து குழாயை நிர்வாகம் எடுத்துச் சென்றதாக அதே பகுதியை சேர்ந்த வீரமணி மற்றும் அவரது மகன் கபில்ராஜ் மற்றும் உறவினர்கள் செல்வி, கலையரசி,ராசு,காளீஸ்வரி ஆகியோர் சேர்ந்து கௌசல்யாவை சரமாரியாக தாக்கி உள்ளனர்.இதில் காயமடைந்த கௌசல்யா சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வீரமணி உட்பட 6பேர் மீது மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story