நகராட்சி அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு

நகராட்சி அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு
இருதரப்பிற்கு இடையே மோதல்
தர்மபுரியில் கட்டிடம் கட்டிட அனுமதி தொடர்பாக நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவரை சந்திக்க சென்ற இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

தர்மபுரி எஸ்.வி.ரோடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் நான்கு பேர் இந்து சமய அறநிலையை துறைக்கு சொந்தமான இடத்தை ஆறு மாதத்திற்கு முன்பு குத்தகைக்கு எடுத்துள்ளனர். அந்த இடத்தில் ஹோட்டல் கட்டிடம் கட்டிட அனுமதி தொடர்பாக நகராட்சி அலுவலகத்திற்கு சென்று நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாதுவை சந்தித்தனர். அப்போது இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதனை தொடர்ந்து ஒருவருக்கொருவர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

பின்னர் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர். அதாவது நகராட்சிதலைவர் சார்பில் தர்மபுரி நகர காவல் நிலையத்திலும் ஆறுமுகம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதத்திடமும் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 2 புகாரின்பேரில் விசாரணை நடத்தப்பட்டது.இதற்கிடையே நகராட்சி தலைவர் கொடுத்த புகாரின் பேரில் மதுரை காவல் துறையினர் ரத்தினம், ஆறுமுகம். பிரபாகரன், முருகன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story